‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ எனும் தொணிப்பொருளுக்கமைய மலையக உறவுகள் அமைப்பின் 60வது செயற்திட்டம் ராகலையில் இடம்பெற்றது.
ராகலையில் கடந்த 5ம் திகதி இடம்பெற்ற தீவிபத்தினால் சுமார் 20 குடும்பங்களைச் சேர்ந்த 75 க்கும் மேற்பட்டோர் தமது உடைமைகளை முற்றாக இழந்து நிர்க்கதிக்குள்ளாகி தற்காலிகமாக திருமண மண்டபமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறித்த மக்களின் அவசியமான தேவையறிந்து மலையக உறவுகள் அமைப்பானது உலர்ருணவுப்பொருட்களை நேற்றைய தினம் வழங்கிவைத்தது.
குறித்த திட்டத்துக்கு உதவிக்கரம் நீட்டிய மலையக உறவுகள் அமைப்பில் பயணிக்கும் அனைத்து அங்கத்தவர்களுக்கும் அதன் தலைவி நன்றிகளை பகிர்ந்துகொண்டதோடு .
அந்த மக்களுக்கு தொடர்ந்தும் உதவ முன்வருமாறு அழைப்பும்விடுத்திருக்கிறார் . மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள் +94 76 171 9607

