எல்ல பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரடகொல்ல ரக்கிட்டகந்த வீதியில் ஊழியர்களை ஏற்றிக்கொண்டு பயணித்த NA-1941 என்ற இலக்கமுடைய பேருந்து காலை 7.30 மணியளவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதன்போது பேருந்தின் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த 08 பேர் வெல்லவாய பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான விசாரணைகளை எல்ல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
ராமு தனராஜா




