பசறை யூரி தோட்ட காரியாலய பிரிவு தோட்ட தொழிலாளர்கள் இன்றைய தினம் 15 கோரிக்கைகளை தோட்ட நிர்வாகத்தினரிடம் முன்வைத்து பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இதன் போது பத்து கோரிக்கைகளை தான் நிவர்த்தி செய்து தருவதாக யூரித் தோட்ட உயர் அதிகாரி வழங்கிய வாக்குறுதியை அடுத்து பணி பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டது.
பசறை யூரி தோட்ட காரியாளய பிரிவு தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடர்பாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளருமான வடிவேல் சுரேஷ் கவனத்திற்கு கொண்டு வந்ததை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஆலோசனையின் பெயரில் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பசறை பிராந்திய இயக்குனர் நல்லையா தலைமையிலான குழுவினருடன் யூரி காரியாலய பிரிவிற்கு சென்று தோட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொண்ட போது தொழிலாளர்களின் 10 கோரிக்கைகளை தான் தீர்ப்பதாக தோட்ட உயர் அதிகாரி உறுதியளித்துள்ளார்.
ஐந்து கோரிக்கைகளை கம்பெனி உயர் அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்துக் கொள்ளும்படி தோட்ட உயர் அதிகாரி கூறியதை தொடர்ந்து தோட்ட தொழிலாளர்களின் பணி பகிஷ் கரிப்பு கைவிடப்பட்டது.
இது தொடர்பான ஐந்து கோரிக்கைகளையும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வை பெற்றுத்தர எதிர்பார்ப்பதாக இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் மாநில இயக்குனர் தெரிவித்தார்.
ராமு தனராஜா



