கடுவலை வெலிபாறையில் உள்ள முட்புதரில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம் கொத்தடுவ சாமர என்பவர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான சம்பவத்தின் காரணமாக இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் ஆலோசனையின் பேரில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடுவலை வெலிபாறையில் உள்ள முட்புதரில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் நிர்வாண சடலத்தை கடுவலை பொலிஸார் இன்று பிற்பகல் மீட்டனர்.
உயிரிழந்தவரின் உடலில் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
