சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்டு, வியட்நாம் நாட்டில் மரணமடைந்த, சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம் விமானம் மூலமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நாளைய தினம் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
