இரண்டாம் இணைப்பு
குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திவிட்டு தப்பிச் சென்ற போது, வெள்ளவத்தையில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுங்க அதிகாரியின் துப்பாக்கியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள், துப்பாக்கிப் பிரயோகம் நடத்திய ஜீப், வெள்ளவத்தை பகுதியில் கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், ஜீப்பில் இருந்தவர்கள் குறித்து தகவல் வெளியாகவில்லை என்றும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
முதலாம் இணைப்பு
கொழும்பு – பம்பலபிட்டி பகுதியில் கார் ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று பிற்பகல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பம்பலபிட்டி – கரையோர (மெரின் டிரைவ்) வீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அண்மித்துள்ள குறுக்கு வீதியொன்றிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
வேன் ஒன்றில் வருகை தந்த அடையாளம் தெரியாத நபர்களினால், கார் ஒன்றில் பயணித்தவர்களை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கி பிரயோகத்தை அடுத்து, வேன் மற்றும் கார் ஆகியவற்றில் பயணித்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளர்.
துப்பாக்கி பிரயோகத்தினால் காருக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியிலிருந்து சில துப்பாக்கி தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

