நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்கள் அதிகரிக்கப்பட்டதன் பின்பு முதன்முறையாக அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இளைஞர் கழக சம்மேளனம் இன்றைய தினம் நிர்வாக குழுவினை தேர்வு செய்தது.
இதன்போது தேசிய இளைஞர் மன்றத்தின் உதவி இயக்குனர் ஸ்ரீ விஜய் ஸ்ரீ அவர்களும் அம்பகமுவ பிரதேச செயலகத்தின் செயலாளர் அவர்களும் நுவரெலியா மாவட்ட தேசிய சம்மேளன பிரதிநிதி சரத் அவர்களும் கலந்து கொண்டனர்.
இதன் போது உரையாற்றிய நுவரெலியா மாவட்ட பிரதிநிதி சரத் அவர்களின் வேண்டுகோளானது மலையக இளைஞர்கள் என்ற ரீதியில் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஊடாக கிடைக்கப்பெறுகின்ற வரப் பிரசாதங்கள் மற்றும் பல வேலை திட்டங்கள் இது எதுவுமே இளைஞர்களுக்கு போய் சேர்வது கடிணமாக உள்ளது.
இதற்குக் காரணமான ஒரே விடயம் என்னவென்றால் நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்கள் அதிகரிக்கப்பட்ட போதிலும் இளைஞர் சேவை அதிகாரிகள் அதிகரிக்கப்படவில்லை அத்தோடு தமிழ் பேசும் அதிகாரிகள் எவரும் மலைக இளைஞர்களுக்காக குரல் கொடுப்பதில்லை என்பதே பாரிய பிரச்சனையாக உள்ளது.
இதற்காக அரசியல் தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்பது எங்களுடைய வேண்டுகோளாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
மலையக இளைஞர்களுக்காக குரல் கொடுக்க மலையக அரசியல் பிரமுகர்கள் முன் வர வேண்டும் அதோடு தமிழ் பேசும் அதிகாரிகளை அதிகரித்து மலையக தோட்ட பிரதேசங்களுக்கு இளைஞர் கழக தேசிய இளைஞர் மன்றம் முன்னெடுக்கும் வேலை திட்டங்களை இளைஞர்களுக்காகவும் இளைஞர் யுவதிகளுக்காகவும் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கமாகும் என்று பகிரங்கமாக நுவரெலியா மாவட்ட தேசிய இளைஞர் சேவை உதவி இயக்குனர் அவர்களிடம் கூறப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் இன்னும் நுவரெலியா மாவட்ட மலையக அரசியல் தலைவர்கள் மலையக இளைஞர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஊடாக கிடைக்கப்பெறும் அனைத்து வேலை திட்டங்களும் மலையக இளைஞர்களுக்கும் கிடைக்கப்பெற வேண்டும் என்பதே எங்களுடைய வேண்டுகோள் ஆகும்.

