மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.08.08.2023.
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் திரு ஜீன் பிரான்கோயிஸ் பேக்டர் அவர்கள் கடந்த 7ஆம் திகதி நுவரெலியா மாவட்டத்திற்கு விசேட விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
நுவரெலியா மாவட்டத்தில் உலக உணவுத் திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதே இந்த விஜயத்தின் பிரதான நோக்கமாகும்.
பின்னர், நுவரெலியா டெஸ்ஃபோர்ட் தோட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட குழந்தை போஷாக்கு தொடர்பான நிகழ்ச்சியிலும் பிரான்ஸ் தூதுவர் கலந்து கொண்டதுடன், அப்பகுதி தாய்மார்களுக்கு போஷாக்கு பைகள் விநியோகம் செய்யப்பட்டது.
இங்கு உரையாற்றிய தூதுவர், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள குழந்தைகளின் போசாக்கு நிலையை உயர்த்துவதற்கும், சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் பிரான்ஸ் அரசாங்கத்தின் ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும் என வலியுறுத்தினார்.
போஷாக்கு மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி சுரேன் படகொட, நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட, ஜனாதிபதி அலுவலக சிரேஷ்ட உதவிச் செயலாளர் சரதாஞ்சலி மனோகரன், உலக உணவுத் திட்டத்தின் நாட்டுப் பணிப்பாளர் அப்துல் ரஹீம் சித்திக், திட்டப் பணிப்பாளர் பேராசிரியர் குவானி லியனகே, மத்திய மாகாண சுகாதார செயலாளர், பொது அத்தியட்சகர், மாகாண சுகாதார பணிப்பாளர் நிஹால் வீரசூரிய, பிராந்திய சுகாதார வைத்திய பணிப்பாளர் நிஷங்க ஜயவர்தன உட்பட பலர் கலந்துகொண்டனர்.

