2023.08.06 நடைபெற்ற சப்ரகமுவ மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்று கே / தெஹி/ஸ்ரீவாணி தமிழ் மஹா வித்தியாலய மாணவர்கள் அகில இலங்கைக்கு தெரிவாகியுள்ளனர்.
எந்த விதமான அடிப்படை வசதிகள் அற்ற நிலையிலும் எங்கள் பாடசாலை மாணவர்கள் கோட்ட மட்டத்திலும் வலய மட்டத்திலும் மாகாண மட்டத்திலும் வெற்றி பெற்று அகில இலங்கைக்கு தெரிவாகியுள்ளமை பெருமைக்குரிய விடயமாகும்.
இம்மாணவர்களுக்கு எல்லா வகையிலும் உதவிநல்கிய பாடசாலை அதிபர் திருவாளர் சிவபாலன் அவர்களுக்கும் மாணவர்களை பயிற்றுவித்த எல். ஆனந்தகுமார் அவர்களுக்கும் மற்றும் பாடசாலை நலன் விரும்பிகளுக்கும் நன்றிகள்.

