தற்கால அதிகரித்த வெப்பநிலை காரணமாக அதிகமான இயற்கை நீர் ஆகாரங்களை சிறுவர்களுக்கு வழங்குமாறு கொழும்பு ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் விசேட சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் இது தொடர்பாக நேற்று முன்தினம் (07) ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், பகல் வேலையில் வெப்பநிலை அதிகரிப்பபதால் சிறுவர்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படும். இவ்வெப்பநிலையின் போது அதிகமாக இயற்கையான நீர் ஆகாரங்களை சிறுவர்களுக்கு வழங்க வேண்டும் என விசேட சிறுவர் வைத்திய நிபுணர் குறிப்பிட்டார்.
இளநீர், தேசிக்காய், தோடை, நாரைத் தோடை, மாதுளை, கஞ்சி போன்ற குடிபானங்களை நீரிழப்புத் தன்மையினைத் தவிர்ப்பதற்காக அவசியம் எனவும், அதிகரித்த வெப்பத்தினால் தலைவலி, வாந்தி, தூக்கமின்மை, அல்லது அதிகரித்த தூக்கம் ஏற்படுவதுடன் உணவுகளின் சுவை குறைதல் போன்ற நிலைமைகள் சிறுவர்களுக்கு ஏற்படலாம் என அவர் விபரித்தார்.
இவ்வாறான காலகட்டத்தில் நீர் அருந்தாது சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்லுதல், விளையாடுதல் மற்றும் வீதிகளில் சுற்றித் திரிதல் போன்றவற்றால் சகலருக்கும் நீரிழப்பு நிலை மற்றும் வெப்ப அதிர்ச்சி நிலைமைகளை எதிர்கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டார்.
இக்காலப்பகுதியில் உஷ்ண அதிகரிப்பின் கீழ் சிறுவர்களுக்கு தோல் நோய் அதிகரிக்கக் கூடும் என்றும், வியர்வைக் கொப்பளங்கள், தோலில் ஈரலிப்பின்மையால் தோல் ஒவ்வாமை போன்ற நோய்கள் ஏற்படலாம் எனவும் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்பதுடன் சிறுவர்களை குளிக்கச் செய்தல், ஒரு நாளைக்கு இரண்டு தடவை அல்லது குளிப்பது முக்கியம் என்பதுடன் 20 விநாடி அளவில் ஒரு தடவைக்கு நீரில் நன்றாக மூழ்கிக் குளிப்பதனால் தோல் நோய்களை குறைக்கக் கூடியதாகக் காணப்படுவதாகவும் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா மேலும் சுட்டிக்காட்டினார்.
