ACT மற்றும் உதவும் கரம் அமைப்பினது ஏற்பாட்டினில் தெரிவு செய்யப்பட்ட ஐந்து பாடசாலைகளுக்கிடையிலான வலைப்பந்தாட்ட போட்டி நிகழ்வானது 2023/08/12 ஆம் திகதியன்று
ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியில் நடாத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அந்தவகையில் இவ் வலைப்பந்தாட்ட போட்டியில்
நு/கிரேட்வெஸ்ட்டன் தமிழ் வித்தியாலயம்
நு/திம்புளை தமிழ் வித்தியாலயம்
நு/கலாபுவனம் தமிழ் வித்தியாலயம்
நு/சென்கிளயர் தமிழ் வித்தியாலயம்
நு/வட்டக்கொட தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் கலந்துக் கொண்ட நிலையில்
போட்டிகளில் முதலாம் இடத்தினை கிரேட்வெஸ்ட்டன் த ,வி பெற்றுக்கொண்டதோடு இரண்டாம் இடத்தினை நு/வட்டக்கொட த.வி மற்றும் மூன்றாவது இடத்தினை நு/கலாபுவனம் பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
அத்தோடு இவ் விளையாட்டு போட்டி நிகழ்வினில் ACT அமையத்தின் உறுப்பினர்கள் மற்றும்
ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி மற்றும் உப பீடாதிபதிகள் பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் கல்லூரியின் கணித,விஞ்ஞான பிரிவு மாணவ ஆசிரியர் பயிலுனர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இவ் போட்டி நிகழ்வுக்கான நடுவர்களாக நுவரெலியா கல்வி வலயத்தின் விளையாட்டு பிரிவின் பொறுப்பாசிரியர் திரு .ரவி ஆசிரியர் மற்றும்
ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் கணித விஞ்ஞான பிரிவு ஆசிரியர் பயிலுனர்கள் இடம்பெற்றிருந்தமை சிறப்பிற்குரியதாகும்.
அத்தோடு இப்போட்டி நிகழ்வினில் பங்குப்பற்றிய மற்றும் வெற்றிப்பெற்ற பாடசாலை அணிகளுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசில் பொதிகளும் மற்றும் விளையாட்டு போட்டிக்கான சீருடைகள் என்பன வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.


