மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 18 ஆவது கொலனி மஹியங்கனை பகுதியில் வீடொன்றினுள் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பாடசாலைக்கு பிள்ளையை கூட்டி செல்வதற்கு குறித்த பெண் வரவில்லை என்று பெண்ணின் கணவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கணவர் குறித்த பகுதியில் உள்ள நபர் ஒருவருக்கு தொலைபேசியின் மூலம் தனது மனைவி வீட்டில் உள்ளாரா என சற்று பார்க்குமாறு கூறியுள்ளார்.
குறித்த நபர் வீட்டுக்கு சென்று பார்க்கும் போது பெண் இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து குறித்த நபரினால் 118 அவசர பொலிஸ் இலக்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது சம்பவ இடத்திற்கு விரைந்த மஹியங்கனை பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா
