யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இரண்டு மோட்டார் சைக்கிளில் ஆயுதங்களுடன் வந்த ஆறு பேர் கொண்ட குழு தாக்குதல் நடத்தியுள்ளது.
கல்வியங்காடு, பூதவராயர் வீதியில் அமைந்துள்ள அரச உத்தியோகத்தர் ஒருவரது வீட்டின் மீதே இன்று அதிகாலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் மாணவர்களின் புத்தகப்பை என்பன தீயிட்டு கொளுத்தப்பட்டன.
வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், சிசிடிவி கமராக்கள் என்பனவும் அடித்து நொருக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் சிசிடிவி கமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாக கொண்டு கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலதிக தகவல்
வெளிநாட்டில் உள்ள தரப்பினரே இங்குள்ள வன்முறை கும்பலுக்கு பணம் அனுப்பி இந்த தாக்குதல் முயற்சியை நடத்தியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கல்வியங்காட்டில் வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பப்பட்டு பல்வேறு வன்முறை சம்பவம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இது தொடர்பில் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்றும் பிரதேச மக்கள் குற்றம் சட்டுகின்றனர்.

