Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

“மாணவர்களை ஏற்றிச் சென்ற ‘சிசுசெரிய’ பேருந்து ஓட்டுநர் கடும் மதுபோதையில் கைது – பதுளையில் பரபரப்பு!”

August 4, 2026

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டு முயற்சி முறியடிப்பு: துப்பாக்கியைப் பறிமுதல் செய்த வெதுப்பக உரிமையாளர்

August 4, 2026

சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

August 4, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஏறாவூர் நகரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட அறிவுக் களஞ்சிய வினா விடைப் போட்டியில் றஹ்மானியா மகா வித்தியாலம் வெற்றி.
இலங்கை

ஏறாவூர் நகரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட அறிவுக் களஞ்சிய வினா விடைப் போட்டியில் றஹ்மானியா மகா வித்தியாலம் வெற்றி.

ThanaBy ThanaAugust 15, 2023No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

(முஹம்மட் றசீன்)

2023 ஒக்டோபர் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு ஏறாவூர் நகரசபை மற்றும் பொது நூலகங்கள் இணைந்து நடாத்திய ஏறாவூர் நகரசபை எல்லைக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான2023 ஜூன் மாதத்திற்கான “அறிவுக் களஞ்சியம்” வினா விடைப் போட்டி இன்று செவ்வாய்க்கிழமை(15) காலை 9.30 மணிக்கு அலிகார் தேசிய பாடசாலை மண்டபத்தில் ஏறாவூர் நகரசபையின் செயலாளர் M.H.M ஹமீம் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.


இப் போட்டியில் அறபா வித்தியாலயம், அல் முனீறா பாலிகா மகா வித்தியாலயம், அலிகார் தேசிய பாடசாலை, குடியிருப்பு கலைமகள் வித்தியாலம், றஹ்மானியா மகா வித்தியாலயம், ஆகிய பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டு போட்டியிட்டனர்.

இறுதிப் போட்டிக்கு அலிகார் தேசிய பாடசாலை, றஹ்மானியா மகா வித்தியாலயம் ஆகியன தெரிவு செய்யப்பட்டன. இறுதியில் றஹ்மானியா மகா வித்தியாலம் வெற்றி பெற்று “Genius school of the month – June 2023” விருதை தனதாக்கிக் கொண்டதோடு, ஒரு மாதத்திற்கு தேசிய செய்திப் பத்திரிகையொன்றினை இலவசமாக பெற்றுக் கொள்ளும் வாய்ப்பினையும் பெற்றுக் கொண்டது.


அத்தோடு போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதோடு முதலாம் இரண்டாம் இடங்களை பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வருகைதந்த அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலய கல்விப் பணிப்பாளர் ஜனாப் எஸ்.எம்.எம் அமீர் அவர்களும், கௌரவ அதிதிகளாக Batticaloa lions club Zone chair person ஜனாப் றுஸ்வின், ஏறாவூர் லயன்ஸ் கழகத்தின் தலைவர் ஏ.ஆர்.ஏ ஆசிக், மற்றும் அங்கத்தவர்கள், நஜிமில் உலூம் சனசமூக நிலையத்தின் தலைவர் ஜனாப் கே. அப்துல் வாஜித், பொருளாளர் ஜனாப் யூ.எல். நூர் முஹம்மட், மற்றும் விசேட அதிதிகளாக பாடசாலைகளின் அதிபர்களும், ஏறாவூர் நகரசபை நிருவாக உத்தியோகத்தர் திருமதி நபீறா றசீன், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் ஏறாவூர் நகரசபை நூலகத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

இவ்வினா விடை போட்டியின் பிரதான நடுவராக ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம் நஸீர் அவர்கள் கடமை புரிந்தார்.

இப்போட்டிக்கான நிதி உதவிகளை ஏறாவூர் லயன்ஸ் கழகம் மற்றும் நஜிமில் உலூம் சனசமூக நிலையம் ஆகியன வழங்கியிருந்தன. இந்நிகழ்ச்சியினை வொயிஸ் ஒப் ஏறாவூர் அமைப்பின் ஆலோசகர் ஏறாவூரின் சிரேஷ்ட அறிவிப்பாளர் எம்.ஐ.எம். றம்ஸி மற்றும் அறிவிப்பாளர் றபீக் ஜலீல் ஆகியோர் சிறப்பான முறையில் தொகுத்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    “மாணவர்களை ஏற்றிச் சென்ற ‘சிசுசெரிய’ பேருந்து ஓட்டுநர் கடும் மதுபோதையில் கைது – பதுளையில் பரபரப்பு!”

    August 4, 2026

    தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டு முயற்சி முறியடிப்பு: துப்பாக்கியைப் பறிமுதல் செய்த வெதுப்பக உரிமையாளர்

    August 4, 2026

    22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

    August 4, 2026

    மலையகத்தில் நீடிக்கும் கடும் மழை: வட்டவளையில் 661 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவு; மண்சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கை

    August 4, 2026
    Editors Picks

    “மாணவர்களை ஏற்றிச் சென்ற ‘சிசுசெரிய’ பேருந்து ஓட்டுநர் கடும் மதுபோதையில் கைது – பதுளையில் பரபரப்பு!”

    August 4, 2026

    தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டு முயற்சி முறியடிப்பு: துப்பாக்கியைப் பறிமுதல் செய்த வெதுப்பக உரிமையாளர்

    August 4, 2026

    சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

    August 4, 2026

    22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

    August 4, 2026

    “மாணவர்களை ஏற்றிச் சென்ற ‘சிசுசெரிய’ பேருந்து ஓட்டுநர் கடும் மதுபோதையில் கைது – பதுளையில் பரபரப்பு!”

    August 4, 2026

    தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டு முயற்சி முறியடிப்பு: துப்பாக்கியைப் பறிமுதல் செய்த வெதுப்பக உரிமையாளர்

    August 4, 2026

    சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.