நாவலப்பிட்டி கம்பளை கல்வி வலயத்தின் க/கம்/ கலமுதுனை தமிழ் வித்தியாலயத்தில் கடந்த 18/08/2023 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலையின் அதிபர் ஆர்.மகேஷ்சிகா அவர்களின் தலைமையில் வருடாந்த பரிசளிப்பு விழாவும் வகுப்பு தலைவர்கள், மாணவர் தலைவர்கள் அனைவருக்கும் சின்னம் அணிவிக்கும் நிகழ்வு மிக விமர்சையாக இடம் பெற்றது.
நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவர்கள், சமூக நலன் விரும்பிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
அத்தோடு அன்றைய தினம் மிக நீண்ட நாட்களாக இருந்த குடி நீர் பிரச்சினையை கண்டி திருத்துவ கல்லூரி பழைய மாணவர்களும், நாவலப்பிட்டி கொத்மலை லயன்ஸ் கழகம், நாவலப்பிட்டி அரிமா கழகமும் இணைந்து குறித்த பிரச்சினையை தீர்த்து வைத்தனர். நிகழ்விற்கு கண்டி திருத்துவ கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் தலைவரும் முன்னாள் மத்திய மாகாண ஆளுநருமாண டிக்கிரி கொப்பேகடுவ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
மோகன்


















