பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மோதுண்டு இளம் யுவதியொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட கொட்டகலை பிரதேசத்தில் நேற்று (20-08-2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் இச் சம்பவத்தில் உயிரிழந்த பெண் ஹட்டன் – ருவன் புற பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடைய சுப்பிரமணியம் இமேக்கா என அடையாளம் காணப்பட்டுள்ளது. கொட்டக்கலை கிரிஸ் லஸ்ஃபாம் எனும் இடத்தில் வைத்தே விபத்து சம்பவித்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள – பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது
