தோட்ட வெளிக்கள உத்தியோகத்தரை இடமாற்றம் செய்யக் கோரி தொழிலாளர்கள்.பணிபகிஸ்கரிப்பு
ஹொரன பெருந்தோட்ட கம்பனிக்கு உட்பட்ட மஸ்கெலிய சாமிமலை தொழிற்சாலை பிரிவு
(ஸ்டொக்ஹோம்)தொழிலாளர்கள்
தோட்ட வெளிக்கள உத்தியோகத்தரை இடமாற்றம் செய்யக் கோரி இன்று பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
குறித்த தோட்டத்தில் பணியில் இருக்கும் தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர் தொழிலாளர்களை முறையற்ற விதத்தில் நடத்துவதாகவ தெரிவித்து அவரை இடமாற்றம் செய்ய வேண்டுமென
கடந்த முதலாம் திகதி முதல் ஆறாம் திகதி வரை தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் பின்னர் 06 ஆம் திகதி ஹட்டன் தொழில் காரியாலயத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஸ்டொக்ஹோம் தொழிற்சாலை பிரிவின் தலமை வெளிக்கள உத்தியோகஸ்தர் இடமாற்றம் செய்ய வேண்டுமென இணக்கம் காணப்பட்ட நிலையில் இன்று அந்த தலமை வெளிக்கள உத்தியோகஸ்தரை மீண்டும் தோட்ட முகாமையாளர் பணிக்கு பலவந்தமாக அமர்த்த முட்பட்டநிலையிலேயே இந்த பணி பகிஸ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.