பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிமெட்டிதென்ன பிரதேசத்தில் நேற்று மாலை ஏற்பட்ட காட்டு தீயினால் 40 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையாகி உள்ளது.
அத்தோடு குறித்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மண் அகழும் இயந்திரம் ஒன்றும் தீக்கிரையாகி உள்ளது.பலாங்கொடை பொலிஸார் தீ அணைக்கும் படையினர் பொதுமக்களும் ஒன்றினைந்து பாரிய முயற்சியின் பின்னர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.இந்த வனப்பகுதி தனியார் ஒருவருக்கு சொந்தமான என்பதும் குறிப்பிடத்தக்கது.

