நுவரெலியா அக்கரப்பத்தனை கிளாஸ்கோ மேற்பிரிவு தோட்டத்தின் 15 ம் இலக்கம் கொண்ட தொடர் குடியிருப்பு வீடொன்றில் நேற்று 26ம் திகதி அன்று இரவு 10 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன் போது வீட்டில் இருந்த அனைத்து உடமைகளும் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன, பொதுமக்களின் முயற்சியால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது, இந்த லயன் குடியிருப்பில் 22 குடும்பங்கள் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது
இச்சம்பவம் தொடர்பான விசாரணையை அக்கரப்பத்தனை போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.
கௌசல்யா

