திணை விதைத்தலும் திணை அறுத்தலும்.
சை.கிங்ஸ்லி கோமஸ்
மனித நேயம் எங்கு இருக்கின்றதோ அங்கு மனிதர்கள் இருப்பார்கள் என்ற உண்மைக்கு சான்றாக இன்று 2023.08.27 ஆம் திகதி அட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் மனம் நெகிழும் நிகழ்வு ஒன்று நடைபெற்றது.
ஆலய பங்கு தந்தை நியூமன் பீரிஸ் அவர்களின் தலைமையில் பங்கு மக்கள் அனைவரும் இணைந்து அட்டன் டிக்கோயா நகர சபையின் சுத்திகரிப்பு ஏழை தொழிலாளியும் ஏழு பிள்ளைகளின் தந்தையுமான ஜே .செல்வம் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து பரிசீல்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு தீபாவளி காலத்தில் தோட்ட தொழிலாளி ஒருவர் 50,000 ரூபாய் ரொக்க பணத்தை அட்டன் நகரில் சன நெரிசலில் தவற விட்டு நிர்க்கதி ஆகி தனது பிள்ளைகளுக்கு ஆடையும் உணவும் வாங்க வழியில்லாமல் பரிதவித்துக் கொண்டிருந்தபோது செல்வம் அந்த பணத்தை தனது சுத்திகரிப்பு தொழில் செய்யும்போது கண்டெடுத்துள்ளார். உடனடியாக அந்த பணத்தை மீண்டும் ஏழை தொழிலாளிக்கு பெற்றுக் கொடுத்துள்ளார். இவர் உண்மையிலேயே உயிர் வாழும் நல்ல சமாரியன் என்பதனை உலகறிய செய்துள்ளார்.
உலகிலேயே உயர்ந்த மனிதன் தான் என்று வாழ்ந்து காட்டி தனது சமூகத்திற்கு மங்கா புகழை ஏற்படுத்திய அவர் இன்று அட்டன் திருச்சிலுவை ஆலய பொது மக்களால் பரிசீல்களும் பணமும் உயர்ந்த மரியாதையும் வழங்கி கௌரவிக்கப்பட்டார் கத்தோலிக்க மக்கள் தங்களின் நன்றியையும் பாராட்டுதல்களையும் மனப்பூர்வமாக தெரிவித்தனர் இதனை ஏற்பாடு செய்த பங்கு தந்தைக்கும் பங்கு மக்களுக்கும் மலையக பிரதேச ஊடகவியலாளர்கள் சார்பாக எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.
மக்களை சுரண்டும் ஏகபோகவாதிகளும் ,
ஏழை பணத்தை கொள்ளையிடும் கள்ள வியாபாரிகளும் ,
சந்தா என்னும் பெயரில் மக்கள் பணத்தை கொள்ளையிடுபவர்களும், லஞ்சம் வாங்கும் அரச ஊழியர்களும், அன்பளிப்பு என்னும் பெயரில் ஏழைகளிடம் பணம் சம்பாதிக்கும் அதிபர்களும் ,
வெட்கி தலைகுனிய வேண்டும் ஏனென்றால் செல்வம் என்னும் மனித நேயன்
“The Real Hero”
