லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளஹா தோட்டத்தில் நேற்றிரவு ஏற்பட்ட கைகளப்பில் மண்வெட்டி தடியில் தாக்கப்பட்டதால் ஒருவர் மரணம்.
தேற்றிரவு தாயுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அயல் வீட்டில் உள்ள ஒருவர் மண்வெட்டி தடியால் தாக்கியுள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி தாக்குதலுக்குள்ளான நபர் பலியானார்.
பலியானவர் 40 வயதுடைய வீரசாமி பெஞ்சமின் – 3 பிள்ளைகளின் தந்தையார்.
தாக்குதலை நடத்திய பெரிய சாமி விஜயகுமார் தலைமறைவாகி இருந்த நிலையில் லிந்துல்லை நாகசேனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கௌசல்யா.
