• முகப்பு
  • இலங்கை
  • கோவில்
  • சினிமா
  • மலையகம்
  • வாழ்க்கை
  • வெளிநாடு
What's Hot

பேருந்திற்கு ஆணி வைத்ததால் பேருந்தை இடை நிறுத்திய சாரதி‌.

December 4, 2023

பலாங்கொடை பலலேபெந்த வீதியின் ஊடக பயணிக்கும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு.

December 4, 2023

200 வருடங்களின் பின்னர் தோட்டத்திற்கு சட்டத்தினூடாக முகவரி பெற்றுக் கொடுத்த மலையக இளைஞன்.!

December 4, 2023
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
  • முகப்பு
  • இலங்கை
  • கோவில்
  • சினிமா
  • மலையகம்
  • வாழ்க்கை
  • வெளிநாடு
Malayagam.lk
Home » இலங்கை கடற்பகுதியில் பயணிக்கும் கப்பல்களின் எண்ணெய் கசிவுகளை செய்மதி தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கும் சேவை
இலங்கை

இலங்கை கடற்பகுதியில் பயணிக்கும் கப்பல்களின் எண்ணெய் கசிவுகளை செய்மதி தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கும் சேவை

ThanaBy ThanaSeptember 12, 2023No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இலங்கை கடற்பகுதியில் பயணிக்கும் கப்பல்களின் எண்ணெய் கசிவுகளை செய்மதி தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கும் சேவை தொடர்பில் பிரான்ஸ் அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (12) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் பிரான்கோசிஸ் பெக்டட் தலைமையில் இடம்பெற்றது.

இந்த உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் அசேல ருகவ மற்றும் பிரான்ஸ் அரசாங்கத்திற்காக பிரான்சில் Collected Localization Satellites (CLS) நிறுவனத்தின் கடல்சார் பாதுகாப்புப் பணிப்பாளர் டேவிட் பஜுகோ ஆகியோர் கையெழுத்திட்டனர்.

ஒப்பந்தம் ஒரு வருட காலத்திற்கு செல்லுபடியாகும் மற்றும் திட்டத்தின் மொத்த மதிப்பு 601,810 யூரோக்கள். இந்த திட்டத்தின் முழு நிதி செலவும் பிரான்ஸ் அரசாங்கத்தின் மானியத்தால் ஈடுசெய்யப்படுகிறது. எனவே இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் எவ்வித செலவையும் ஏற்க வேண்டியதில்லை.

இந்த நாட்டின் கரையோரத்தில் கப்பல்கள் செல்லும் வழிகளை அடையாளம் கண்டு, எண்ணெய் கசிவுக்கு எதிராக உடனடியாக பதில் நடவடிக்கை கொடுப்பதும், சட்டத்தை அமுல்படுத்துவதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆபிரிக்காவிற்கு இடையே ஒரு முக்கிய இணைப்பாக செயல்படும் இலங்கை ஒரு முக்கிய உலகளாவிய கப்பல் பாதையில் அமைந்துள்ளது. இந்தியப் பெருங்கடலின் மையப்பகுதியில் அமைந்துள்ள இலங்கையானது சர்வதேச வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இலங்கையின் தெற்கு கடற்கரையில் தினமும் சுமார் 300 – 350 கப்பல்கள் கடந்து செல்வதால், கடலோர கடற்பகுதியில் கடல் போக்குவரத்து அடர்த்தி மிகவும் அதிகமாக உள்ளது. மேலும், அனன்யா பொருளாதார வலயத்தில் வருடாந்தம் 525 மில்லியனுக்கும் அதிகமான மெற்றிக் தொன் எரிபொருள் இலங்கைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதனால், கடல் விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

கப்பல் துறை வளர்ச்சி மற்றும் துறைமுக அபிவிருத்தியால் இந்நாட்டின் கடற்பரப்பில் பயணிக்கும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே, கப்பல்களால் ஏற்படும் எண்ணெய் கசிவுகள் குறித்த தகவல்களை விரைவாகப் பெறுவதற்கான அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், கப்பல்களால் ஏற்படும் மாசுபாட்டைத் தடுக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வது, மாசுபாட்டிற்கு காரணமான கப்பல்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது எளிதாக இருக்கும்.

கூடுதலாக, Collected Localization Satellites (CLS) வல்லுநர்கள் கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகளுக்கான நீண்டகால திறன் மேம்பாட்டுத் திட்டத்தை உருவாக்கி, நாட்டின் கடலோரப் பகுதியைப் பாதுகாக்க, சுற்றுச்சூழல், பொது சுகாதாரம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஏற்படும் ஆபத்து மற்றும் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிதல் மூலம் உருவாக்கியுள்ளனர்.

இந்த திட்டத்தை செயல்படுத்தி வரும் Collected Localization Satellites (CLS) என்ற பிரான்ஸ் நிறுவனம் தற்போது உலகம் முழுவதும் 34 இடங்களில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் பூமியை கண்காணித்து வருகிறது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, பிரான்ஸ் தூதரகத்தின் பொருளாதார ஆலோசகர் ஜீன் அலெக்சாண்டர், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ. எஸ். சத்யானந்த, கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் ஏ.ஜே.எம். குணசேகர, முப்படை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முனீரா அபூபக்கர்

2023/09/13

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

Related Posts

பேருந்திற்கு ஆணி வைத்ததால் பேருந்தை இடை நிறுத்திய சாரதி‌.

December 4, 2023

பலாங்கொடை பலலேபெந்த வீதியின் ஊடக பயணிக்கும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு.

December 4, 2023

மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ள களனிப் பல்கலைக்கழகம்.

December 4, 2023

பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்ட நுவரெலியா இ.போ.ச ஊழியர்கள்!

December 4, 2023
Editors Picks

பேருந்திற்கு ஆணி வைத்ததால் பேருந்தை இடை நிறுத்திய சாரதி‌.

December 4, 2023

பலாங்கொடை பலலேபெந்த வீதியின் ஊடக பயணிக்கும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு.

December 4, 2023

200 வருடங்களின் பின்னர் தோட்டத்திற்கு சட்டத்தினூடாக முகவரி பெற்றுக் கொடுத்த மலையக இளைஞன்.!

December 4, 2023

இலங்கை கிரிக்கட் தெரிவுக்குழுவின் புதிய தலைவராக உபுல் தரங்க.

December 4, 2023

பேருந்திற்கு ஆணி வைத்ததால் பேருந்தை இடை நிறுத்திய சாரதி‌.

December 4, 2023

பலாங்கொடை பலலேபெந்த வீதியின் ஊடக பயணிக்கும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு.

December 4, 2023

200 வருடங்களின் பின்னர் தோட்டத்திற்கு சட்டத்தினூடாக முகவரி பெற்றுக் கொடுத்த மலையக இளைஞன்.!

December 4, 2023
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
© 2023 Malayagam.lk. Designed by Gnext.

Type above and press Enter to search. Press Esc to cancel.