மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தொடர்பான அனைத்து மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், ஒவ்வொரு செயல்முறையையும் டிஜிட்டல் மயப்படுத்தி E-மோட்டார் திட்டத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க நாங்கள் எதிர்பார்த்துள்ளோம் என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (12) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
E-மோட்டார் திட்டத்திற்காக கட்டிடம் ஒன்று வாடகைக்கு எடுக்கப்படவிருந்ததுடன், ஹூனுபிட்டியஇ கங்காராம பிரதேசத்தில் அமைவிடம் தொடர்பில் அரசாங்க மதிப்பீட்டாளர்களால் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமையஇ E-மோட்டார் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அலுவலக ஏற்பாட்டை இவ்வருட ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ள அதே திகதியில் பூர்த்தி செய்ய முடியாவிட்டாலும், இந்த வருட இறுதிக்குள் முடிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
