தலவாக்கலை பிரதேச செயலகத்திக்குட்பட்ட பகுதியில் மிகவும் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு உலக உணவு திட்டத்தின் கீழ் உணவு பொதி வழங்கும் செயல் திட்டம் அக்கரப்பத்தனை பிரதேசத்தில் 20 அன்று முன்னெடுக்கப்பட்டது.
475 j கிராம சேவகர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட ஆயிரம் குடும்பங்களுக்கு உதவி வழங்கும் திட்டம் பசுமலை விகாரையில் கிராம சேவகர் ராமச்சந்திரன் குழந்தைவேல் தலைமையில் இடம்பெற்றது.
தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு 50 கிலோ அரிசி 05 லீட்டர் தேங்காய் எண்ணெய் பருப்பு 10 கிலோ உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
