லுணுகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹொப்டன் யப்பாம தனியார் தோட்டம் ஒன்றுக்கு தொழிலுக்கு சென்ற 53 வயதுடைய நபர் தொழிலில் ஈடுபட்டு இருந்த வேளையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஹொப்டன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளித்த போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் 53 வயதுடைய லுணுகலை ஹொப்டன் பங்களோ பிரிவைச் சேர்ந்த நபர் எனவும் மரணித்த நபரின் சடலம் ஹொப்டன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.