இலங்கைக்கு மலையக மக்கள் அழைத்துவரப்பட்டு 200 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது. இதையொட்டி மலையக ஆசிரியர்களுக்கான ஆய்வு மாநாடு ஒன்று 2024ம் ஆண்டு நடைபெறவுள்ளது. மலையகத் தமிழ் மக்களின் சமூக, பொருளாதார, கலாச்சார உரிமைகளை வென்றெடுப்பதில் பெரும் சவால்கள் தொடர்ச்சியாக நிலவுகின்றது.
இந்த சூழ்நிலையில், மலையக மக்களின் எழுச்சிக்காக பங்காற்ற விரும்பும், மேலும் மலையகம் சார்ந்த ஆய்வுகளில் ஈடுபட ஆர்வம் உள்ள இளம் ஆசிரியர்களுக்கும், ஆசிரிய மாணவர்களுக்கும் இந்த மாநாடு ஒரு வாய்ப்பாக அமையும். மாநாட்டிற்கு ஆயத்தமாக மூத்த கல்வியியலாளர்களும், ஆய்வாளர்களும் இணைந்த பயிற்சிப் பட்டறைகளும் நடாத்தப்படும். இந்த மாநாடு இளம் ஆய்வாளர்கள் வலையமைப்பு மற்றும் சட்டம் மற்றும் சமூக நம்பிக்கையினால் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் பின்வரும் கருப்பொருட்கள் உட்பட மலையக தமிழர்கள் சார்ந்த எந்தவொரு ஆய்வுகளும் வரவேற்க்கப்படும்: நில உரிமையும் வாழ்வாதாரமும், கல்வி, சுகாதாரம், உணவு முறைமை,பெருந்தோட்ட பொருளாதாரத்தின் எதிர்காலம், இளைஞர்களின் வேலைவாய்ப்பு. சமர்ப்பிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள் யாவும் பால்நிலை சார்ந்த நோக்குநிலை கொண்டதாக அமைய வேண்டும்.
முதலாவது பயிற்சிப் பட்டறை 2023 நவம்பர் மாதம் 18,19 ஆம் திகதிகளில் கொட்டகலையில் இடம்பெறும். ஆய்வு முறையியல், பால்நிலை, அரசியல் பொருளாதாரம் மற்றும் பொருளாதார சமூக கலாசார உரிமைகள் பற்றிய பயிற்சிகள் இந்தப் பட்டறையில் வழங்கப்படும்.
இந்த ஆசிரியர் ஆய்வு மாநாட்டில் பங்குபற்றுவதற்கான இளம் ஆசிரியர்கள், ஆசிரிய மாணவர்கள் விண்ணப்பப் பத்திரத்தை நிரப்பி சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதி 2023 ஒக்டோபர் 23 ஆகும். மாநாட்டில் கலந்துகொள்வதற்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நவம்பர் முதல் வாரத்தினுள் மேலதிக தகவல்கள் அறிவிக்கப்படும். விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள்: நியந்தினி 077-5911725 / மதுசிகா 076-3903628.
விண்ணப்ப படிவம்
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdkCcEzTvs0y_jP6mBnFF0BJRq7V5KkPrQ_Ha5ghFFI6Kos5A/viewform?fbclid=IwAR1Wu8tWXKoPRhWNrcNHeiRBCiqXowvs2eNMpCrHVYvwWYcl_09rNZB19SU