கேகாலை மாவட்டம் எட்டியாந்தோட்டை பிரதேசத்தில் வீ ஓயா தோட்டத்தில் ரொக்ஹவுஸ் பிரிவில் முதல் பட்டதாரி எனும் பெருமையை செல்வி த.மோகன பிரியா அவர்கள் பெற்றுள்ளார்.
இவர் களனிப் பல்கலைக்கழகத்தில் பேச்சு மற்றும் மொழி சிகிச்சையாளர் எனும் கற்கை நெறியை நிறைவு செய்துள்ளார்.
மற்றும் ரொக்ஹவுஸ் பிரிவில் செல்வி கா. வினோதினி அவர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட பீடத்தை தெரிவு செய்து பட்டம் பெற்றுள்ளார்.
இவர் கேகாலை மாவட்டத்தின் முதல் தமிழ் சட்டத்தரணி எனும் பெருமையையும் பெற்றுள்ளார்.
செல்வன் மு. இர்ஷான் அவர்கள் சபரகமுவா மாகாண மட்டத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் மாகாண மட்டத்தில் முதலாவது இடத்தைப் பிடித்தார்.
இவர்களை கௌரவிக்கும் வகையில் 2023/10/15 ஞாயிற்றுக்கிழமை கே/தெஹி/நிவ் பொலட்டகம தமிழ் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் ஊர் இளைஞர்கள் சார்பில் பாராட்டு விழா ஏற்பாடு செய்து நிறைவுப் பெற்றது.
இந் நிகழ்வில் கே/தெஹி/நிவ் பொலட்டகம தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் திரு.அ.பி.செல்வரட்னம் ஐயா அவர்கள் மற்றும் கே/தெஹி/யோகம தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் திரு.வி.ரவிசந்திரன் ஐயா அவர்கள் மற்றும் கே/தெஹி நிவ் பொலட்டகம தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் திரு. ல. தினேஷ் குமார் ஆசிரியர் ஆகியோர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாதனையாளர்களுக்கு
விருதுகளையும் வழங்கியதுடன் சிறப்பித்தும் கொடுத்தார்கள் .
இச் சாதனையாளர்களுக்கு ஊர் பொது மக்கள், விழா ஏற்பாட்டு குழுவினர்கள் மற்றும் அனைவரின் சார்பாகவும் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.











