பிரவுன்லோ ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய நிர்வாகசபையை இரகசிய வாக்குகெடுப்பு மூலம் ஒவ்வொரு மூன்று வருடங்ள் முடிந்த பின்பும் யாப்பின் அடிப்படையில் இடம்பெருவது வழக்கம்.
அந்த அடிப்படையில் 2017,2020 அதணை தொடர்ந்து 2023.10.15 அன்று சிறப்பாக அனைத்து பொதுமக்களின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றது.
இந்த தேர்தலை மேற்பார்வை செய்து கண்காணிக்க மஸ்கெலியா பிரதேஷசபை செயலாளர் . ராஜவீரன், நோர்வூட் பிரதேஷ செயலக இந்து சமயத்திக்கு பொறுப்பான உத்தியோகஸ்த்தர் திருமதி. கல்பனா, கிராம சேவகர் குணதிலக்க, மஸ்கெலியா உதவி பொலிஸ் பொறுப்பு அதிகாரி திரு. செனவிரத்ன,அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் ரூபன், கலாநிதி ,. சதாசிவம், சமாதான நீதவான் உதயகுமார், சமாதான நீதவான் மோகனராஜ் மற்றும் பிரவுன்லோ 320N பொலிஸ் பொறுப்பு அதிகாரி விக்னேஸ்ராஜ் கலந்து கொண்டு தமது ஒத்துழைபிணை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்து சென்றார்.
பொது மக்கள் அனைவரும் சிறந்த முறையில் ஒத்துழைப்பிணை வழங்கிய அதே வேலை பிரவுன்லோ தேர்தல் குழு நேர்த்தியாகவும், நேர்மையாகவும் நடாத்தி கொடுத்திருந்தார்கள்.
நோக்கம் :- இது போன்று அனைத்து தோட்டபுரம் மற்றும் நகர் புறங்களிலும் தெரிவு இடம் பெற்றால் பாகுபாடு இல்லாமல், அரசியல், ஜாதி, மதம் இனம் வேறுபாடு இன்றி ஆலய நிர்வாகம் இடம்பெரும்.