மஸ்கெலியா நிருபர்.
நேற்று முன்தினம் 1ம் திகதி இரவு வேளையில் நல்லதண்ணி நகருக்கு செல்லும் பிரதான சாலையில் உள்ள வர்த்தக நிலையத்தில் சுமார் மூன்று லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்ளை இட்டு சென்று உள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்து உள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் நேற்று முன்தினம் இரவு இப் பகுதியில் மழை பெய்து வந்த வேலையில் இவ்வாறு கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது எனவும் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் இருந்து தடையவியல் அதிகாரிகள் நேற்று சம்பவ இடத்துக்கு வந்த சுமார் மூன்று மணித்தியாலம் கை ரேகை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து சகல மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நல்லதண்ணி பொலிஸ் பொறுப்பதிகாரி சார்ந்த வீரசேகர தெரிவித்தார்.

