லுணுகலை ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியின் வரலாற்று சாதனை
விஞ்ஞான பீடம் ஆரம்பிக்கப்பட்டு முதல் தடவையிலேயே வெளிவந்த பெறுபேற்றின் அடிப்படையில் பல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் விபரம்
A.ராஜேஷ் குமார் -BSC விவசாயம்
(யாழ் பல்கலைக்கழகம்)
C.சிந்து பிரவீன்- BSC பிரயோக விஞ்ஞானம் (வவுனியா பல்கலைக்கழகம்)
C.தீபாதரணி சித்த மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (EUSL)
முழுமையான ஆசிரியர் வளம் இல்லாத நிலையிலும் இவ் வெற்றியை பெறுவது என்பது சாதாரண விடயம் அல்ல. இவ்வெற்றியை பெற்றுத் தந்த மூன்று ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் அதிலும் குறிப்பாக ஒருவரே நிரந்தர அரச நியமனம் பெற்ற ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஞ்ஞான பிரிவில் சாதிப்பது என்பது இயலாத காரியம் என்ற நிலைப்பாட்டை மாற்றிய பெருமை இம் மூன்று ஆசிரியரை சாரும். பல்வேறு பெரிய பாடசாலை ஆசிரியர்களால் முடியாத விடயத்தை முதல் தடவையிலேயே சாதித்து விட்டீர்கள் தொடர்ந்தும் விஞ்ஞான துறையில் மாணவர்களை உருவாக்க எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
1st doctor from SRC Lunugala. Sidha Medicine and Surgery.
பாடசாலை விஞ்ஞான பிரிவை உருவாக்குவதற்கு பல்வேறு தரப்பினர் பல்வேறு நல்ல உள்ளங்கள் உதவினார்கள் அனைவருக்கும் பாடசாலை சார்பான மனமார்ந்த நன்றிகள்
