வெல்லம்பிட்டி, வேரகொட பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் சுவர் இடிந்து வீழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் மேலும் 6 மாணவர்கள் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுள் ஒரு மாணவனின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த மாணவி தரம் 1 இல் கல்வி பயிலும் ஆறு வயதுடையவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
