வெளியிடப்பட்ட க.பொ.த.சா/தர 2022 (2023) பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இரத்கங்ஹ ஸ்ரீ நாவலர் வித்தியாலயத்தில் பரீட்சைக்கு தோற்றிய 28 மாணவர்களில் 24 மாணவர்கள் உயர்தரம் பயிலக்கூடிய வகையில் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இது 85.7% சதவீத வெற்றியாகும்.
இதில் விஷேட அம்சமாக கணித பாடத்தில் 100% சித்தியும், ஆங்கில பாடத்தில் 92% சித்தியும், விஞ்ஞான பாடத்தில் 64% சித்தியும் கிடைக்கப்பெற்றுள்ளது.
உங்களின் அயராத முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி…
கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் சித்தியடைந்த மாணவர்களின் கல்விப்பயணம் மென்மேலும் வெற்றியுடன் தொடர வாழ்த்துகின்றோம்.
தரமான கல்வியின் மூலமாகவே மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனும் எண்ணக்கருவிலே இரத்தினபுரி மாவட்டத்தில் உயர்தரத்தில் விஞ்ஞான, கணித பாட பிரிவுகளை கற்பதற்கான சரியான பாடசாலைகள் இல்லாத நிலையில் மாணவர்கள் அப்பாடங்களில் விஷேட சித்தியடைந்துள்ளார்கள். எனவே இனிவரும் காலங்களிலேனும் இது தொடர்பாக சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு இரத்தினபுரி மாவட்டத்தில் கணித, விஞ்ஞான பிரிவுகளை ஆரம்பிக்க சம்பந்தப்பட்ட உயர்கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழையமானவர்கள்
