தேசிய ரீதியான பாடசாலைகளுக்கிடையிலான நாடகப்போட்டியில் ஹ/ ஹைலன்ஸ் கல்லூரி ஆறு தேசிய விருதுகளை பெற்றுள்ளது.
கல்வி அமைச்சு மற்றும் டவர் அரங்க மண்டபம் இணைந்து நடாத்திய நாடக விருது விழா 28/12/2023 அன்று மருதானை எல்பின்ஸ்டன் மண்டபத்தில் பிரதம மந்திரி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக புத்தசாசன சமய மற்றும் கலாசார அமைச்சர், செயலாளர், பேராசிரியர் சி. மௌனகுரு மற்றும் அரங்கத்துறை சார்ந்த பலர் கலந்து கொண்டனர்.
குறித்த தேசிய ரீதியான பாடசாலைகளுக்கிடையிலான நாடகப்போட்டியில் ஹ/ ஹைலன்ஸ் கல்லூரி ஆறு தேசிய விருதுகளை பெற்றுள்ளது.
பாடசாலை நாடக வரலாற்றில் தேசிய ரீதியாக ஆறு விருதுகள் பெற்றது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த ஒப்பனையாளர் திரு. ஞானசேகரன்.( நாடகமும் அரங்கியலும் ஆசிரியர்)
சிறந்த இசையமைப்பாளர் திரு சுந்தர பிரசாந் ( இசைத்துறை ஆசிரியர்)
சிறந்த நடிகன் சொல்வன் ரொட்னி.
சிறந்த துணை நடிகன் செல்வன் நாதேஸ்வரன்.
சிறந்த மேடையமைப்பாளர் செல்வன் வைஸ்னவ்.
போன்ற விருதுகளை ஹ/ ஹைலன்ஸ் கல்லூரி பெற்று சாதனைப்படைத்துள்ளது.
இதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய பாடசாலை அதிபர் . பிரதி அதிபர்கள் ,ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் அனைவருக்கும் மலையகம்.lk வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவிக்கின்றது.
