Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

August 12, 2026

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

August 12, 2026

கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

August 12, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஒவ்வொரு கிராமத்தையும் மேம்படுத்த வேண்டும் என்பதே அரசின் கொள்கை
இலங்கை

ஒவ்வொரு கிராமத்தையும் மேம்படுத்த வேண்டும் என்பதே அரசின் கொள்கை

ThanaBy ThanaFebruary 15, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து கொண்டு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் கொள்கையில் இருந்து தற்போதைய அரசாங்கம் இல்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

மக்களின் கருத்துக்களை உள்வாங்கி மக்களின் தேவைகளை கருத்திற் கொண்டே அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதற்கேற்ப ஒவ்வொரு கிராமத்தையும் அபிவிருத்தி செய்வதே அரசாங்கத்தின் கொள்கை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கேகாலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில்  (14) இடம்பெற்ற “மலை நாட்டு எழுச்சி தசாப்தம்” அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்தார். கேகாலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

கேகாலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்கிரமசிங்க மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அதன் சொந்த அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு சுற்றறிக்கைகள் மூலம் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

மலைப் பத்தாண்டு திட்டம் இந்த ஆண்டு 10 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். அந்த மாவட்டங்கள் கண்டி, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை, காலி, களுத்துறை, பதுளை மற்றும் குருநாகல் ஆகும்.

மலைப் பத்தாண்டு வேலைத்திட்டம் 10 மாவட்டங்களில் உள்ள 89 பிரதேச செயலகப் பிரிவுகளில் 4,498 கிராம சேவகர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதற்காக கடல் மட்டத்திலிருந்து 200 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் அமைந்துள்ள பிரதேச செயலகங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இங்கு உரையாற்றிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, கேகாலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 569 கிராம சேவகர் பிரிவுகளிலும் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். அரநாயக்க, புலத்கொஹுபிட்டிய, தெஹியோவிட்ட, தெரணியகல, கலிகமுவ, கேகாலை, மாவனெல்ல, ரம்புக்கன, ருவன்வெல்ல, வரகாபொல மற்றும் யட்டியந்தோட்டை ஆகியன அந்தப் பிரதேச செயலகப் பிரிவுகளாகும்.

கேகாலை மாவட்டத்திற்கான அபிவிருத்தி நிதி ஒதுக்கீடுகள் தொடர்பிலும் அமைச்சர் அதிகாரிகளிடம் தெரிவித்தார். கேகாலை மாவட்டத்தில் “மலை பத்தாண்டு“ வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 1,100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் மலைப் பிரதேசங்களில் வாழும் மக்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மலைப் பத்தாண்டு எனப்படும் பத்தாண்டு கால பல்நோக்கு கிராமப்புற மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த வேலைத்திட்டத்திற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள தொகை 10,000 மில்லியன் ரூபாவாகும். இதன் கீழ் ஒரு பிரதேச செயலகத்திற்கு தலா 100 மில்லியன் ரூபா கிடைக்கும்.

இந்த அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில், 10 முக்கிய அபிவிருத்திப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதாவது வாழ்வாதாரம், சந்தை அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாடு, கல்வி, குடிநீர் வசதி, விவசாயம் மற்றும் சிறு நீர்ப்பாசனம், மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்கவை, தொலைபேசி மற்றும் இணையம், சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பேரிடர் முகாமைத்துவம் மற்றும் வீட்டு வசதிகளை மேம்படுத்துதல். மலையக பிரதேசங்களில் வாழும் பெருந்தோட்ட சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு விரைவான மற்றும் திட்டமிடப்பட்ட அணுகுமுறையை மேற்கொள்வதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்திற்கான மாவட்ட மற்றும் பிரதேச குழுக்களின் இணக்கப்பாடு கிடைத்த பின்னர், மாவட்ட செயலாளர்களின் முழு ஈடுபாட்டுடனும், ஏனைய அரச நிறுவனங்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் பூரண ஆதரவுடனும் கூட்டுத் திட்டமாக நடைமுறைப்படுத்தப்படும். இந்த திட்டத்தை ஜனாதிபதி அலுவலகம், பணவியல், நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு மற்றும் நகர  அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சும் மேற்பார்வை செய்கிறது.

இந்நிகழ்வில் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், வெளிவிவகார அமைச்சர் தாரக பாலசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர்களான உதயகாந்த குணதிலக்க, சுதத் மஞ்சுள, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ. எஸ். சத்தியானந்த, கேகாலை மாவட்ட செயலாளர் ஜே.எம்.ஆர்.பி. ஜெயசங்கர் மற்றும் அரச அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.

முனீரா அபூபக்கர்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

    August 12, 2026

    துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

    August 12, 2026

    மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்த சிறைச்சாலை அதிகாரி கைது! 20 இலட்சம் பெறுமதியான ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் மீட்பு..

    August 12, 2026

    போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளிப்பதற்காக 635 மில்லியன் ரூபாய் செலவில் சீர்திருத்த நிலையம் அமைக்க அமைச்சரவை அனுமதி

    August 11, 2026
    Editors Picks

    ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

    August 12, 2026

    துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

    August 12, 2026

    கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

    August 12, 2026

    மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்த சிறைச்சாலை அதிகாரி கைது! 20 இலட்சம் பெறுமதியான ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் மீட்பு..

    August 12, 2026

    ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

    August 12, 2026

    துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

    August 12, 2026

    கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.