சப்ரகமு பல்கலைக்கழக மூன்று மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்ப்பட அதே பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட 13 மாணவர்களையும் தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் சரிர பிணையில் செல்ல பலங்கொடை மேலதிக நீதிமன்ற நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.
கடந்த 9 ஆம் திகதி இரவு சப்ரகமு பல்கலைக்கழக விவசாய பிரிவில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்றுவந்த மூன்று மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் அதே பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டதுடன் ஏனைய 6 மாணவர்களையும் நேற்றைய தினம் கைது செய்தனர்.மேற்குறிப்பிட்ட 13 மாணவர்களையும் பலாங்கொடை மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையில் படுத்தியபோது
இவர்களை 15 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து இன்றைய தினம் சப்ரகமு பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர்கள் 13 பேரையும் இன்றைய தினம் பலாங்கொடை மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையில் படுத்தியபோது. இவர்களை தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் 13 மாணவர்களுக்கும்
13 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.அத்தோடு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட 13 மாணவர்களையும் மீண்டும் நாளைய தினம் பலாங்கொடை மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையில் படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
