வங்காலை மன்/புனித ஆனாள் கல்லூரியின் பத்தாம் வகுப்பில் கற்கும் சாம் நிலவன் குலாஸ் என்ற மாணவரை கணித பாடம் கற்பிக்கும் ஆசிரியர் 2024.02.21அன்று கண் மூடித்தனமாக தாக்கியுள்ளார் அதை தொடர்ந்து அந்த பாடசாலையில் கற்பிக்கும் இன்னொரு ஆசிரியரால் இந்த மாணவன் தாக்கப்பட்டுள்ளார்
மாணவனை தாக்கியதும் இல்லமால் ஐஸ் கட்டி வைத்து முகத்தில் உள்ள அடித்த தழும்பை இல்லாமால் செய்து வீட்டுக்கு செல்லுமாறு பாடசாலையில் கற்பிக்கும் முதல் ஆசிரியரால் மாணவனுக்கு கூறப்பட்டுள்ளது.
தாக்கப்பட்ட மாணவன் சிகிச்சைக்காக மன்னார் போதனா வைத்தியாசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார்.


