ஹங்குராங்கெத்த கலவி வலயத்திற்க்கு உற்ப்பட்ட ஹேவாஹேட்ட நுல்கந்தூர தமிழ் வித்தியாலயம் பாடசாலை பெயர் மாற்றம் செய்து திறப்பு விழா நிகழ்வு (29/02)நடைப்பெற்றது.
பாடசாலையின் புதிய பெயர் ஆதவன் வித்தியாலயம் என்ற பெயரை பாடசாலை அதிபர் ஆறுமுகம் மகேந்திரன் தலைமையில் பிரதம விருந்தினராக நூவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்,பி. திசாநாயக்க அவர்கள் புதிய பெயர் பலகையை திறந்து வைத்தார்,
இந்த நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டு இருந்தனர்,
ஆதவன் வித்தியாலயம் என்ற பாடாசாலை 100 வருடத்திற்கு மேல் பழைமையான பாடசாலையில் மாணவர்கள் விளையாடுவதற்க்கு மைதானம் இல்லாத காரணத்தினால் பாடசாலை மாணவர்கள் தெல்தோட்டை ஹேவாஹேட்ட பிரதான வீதியில் தான் இன்னும் விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டு இருக்கின்றது.
இது தொடர்பில் நிகழ்வின் போது ஆதவன் வித்தியாலய பாடசாலை அதிபர் ஆறுமுகம் மகேந்திரன் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி,திசாநாயக்க அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றமை குறிப்பிடத்தக்கது .


