மஸ்கெலியா செய்தியாளர்.செ.தி.பெருமாள்.16.03.2024.
வெள்ளவத்தையில் சேர்ந்தவர் சிவனடிபாத மலைக்கு தரிசனம் செய்ய சென்றவேளை உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 73 வயதான நாராயணன் சாபு என அடையாளங் காணப்பட்டுள்ளார்.
ஹட்டன் நல்லதண்ணி வழியாக சிவனடிபாத மலைக்கு தரிசனம் செய்ய சென்று கொண்டிருந்த வேளையில் திடீர் சுகவீனமுற்ற நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், 15.03.2024 அன்று இரவு 12.35 மணிக்கு குறித்த நபர் உயிரிழந்ததாக மஸ்கெலியா வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
இதேவேளை குறித்த நபரின் உடலம் இன்று உடற் கூற்று பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை நல்லதண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
