தோட்ட பகுதிகளில் வளர்ப்பு மாடுகளை களவாடி வெட்டி இறைச்சிக்காக விற்பனை செய்து வந்த நபர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் பசறை சங்கபோவ மாவத்தையை சேர்ந்த 34 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர். நேற்று அதிகாலை எல்டப் கிகிரிவத்தை பகுதியில் மாட்டு தொழுவத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த சுமார் 2 வயதுடைய மாடொன்றை காணவில்லை என மாட்டு உரிமையாளர்கள் தேடிய போது பசறை மடூல்சீமை வீதி 3 ம் கட்டை பகுதியில் தோட்ட தொழிலி்ல் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களால் குறித்த பகுதியில் இரத்த கறைகள் காணப்படுவதாகவும் இவ்விடத்தில் மாடு வெட்டப்பட்டிருக்கலாம் எனவும் மாட்டு உரிமையாளருக்கு தகவல் வழங்கப்பட்டள்ளது.
இதன்போது அவ்விடத்திற்கு விரைந்த மாட்டு உரிமையாளர்கள் அவ்விடத்தில் மாட்டின் தலை, மாட்டின் தோல் ஆகியன கிடப்பதை அவதானித்து உடன் பொலிஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
பின்னர் அவ்விடத்தில் சந்தேகத்துக்கு இடமான முறையில் சுற்றி திரிந்த மகேந்திரா ரக லொறி ஒன்றின் மீது சந்தேகம் கொண்ட மாட்டு உரிமையாளர்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதன்போது சந்தேகத்துக்கிடமான குறித்த லொறியை சோதனைக்குட்படுத்திய பொலிஸார் லொறியில் குறித்த மாட்டின் கயிறு காணப்பட்டதாகவும் இரத்தக்கறை காணப்பட்டதாகவும் தெரிவித்தனர். குறித்த லொறியில் காணப்பட்ட கயிரானது தனது மாட்டின் கயிரென மாட்டின் உரிமையாளர் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை பொலிஸ் நிலைய பதில் பொருப்பதிகாரி ரத்னாயக தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்ஙொண்டு வருகின்றனர்.
