செ.திவாகரன் ஆ.ரமேஸ்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவி மூலம் இலங்கையில் “அட்ரா”(ADRA) நிறுவனத்தின்
ஊடாக நுவரெலியா மாவட்டத்தில் எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ள புதிய வேலைத்திட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு நுவரெலியா அரலிய சிட்டி ஹோட்டலில் (08) மாலை இடம்பெற்றது.
1983 ஆம் ஆண்டு இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட “அட்ரா” நிறுவனம் பல மாவட்டங்களில் குடிநீர் வசதி மேன்பாடு, போசணை மேம்பாடு,அவசர உதவிகள்,மற்றும் பெருந் தோட்ட மற்றும் கிராமிய மக்களின் வாழ்வாதார மேம்படுத்தல் என பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை கடந்த காலங்களில் மேற்கொண்டுள்ளது.
அந்தவகையில் 2024 ஆம் ஆண்டுக்கான புதிய வேலைத்திட்டங்களை அனுராதபுரம் மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அனுராதபுரம் மாவட்டத்திற்கான புதிய வேலைத்திட்டம் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன்,
நுவரெலியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய வேலைத்திட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகளிகளின் பங்குப்பற்றளுடன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான “அட்ரா” நிறுவனத்தின் தேசிய அத்தியட்சகர் மெத்திவ் விட்தி மற்றும் நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் நிஸன்சல பெரேரா உட்பட நிறுவனத்தின் திட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த புதிய திட்டமானது சிவில் சமூக அமைப்புகளின் மேம்படுத்தப்பட்ட சேவை வழங்கல் மற்றும் அதிகாரமளித்தல் மூலம் பெருந்தோட்டங்கள் மற்றும் கிராமப்புற சமூகங்களின் ஊட்டச்சத்தை விருத்தி செய்தல் எனும் தொணியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






