வீடொன்றின் படுக்கை அறையில் தீ பரவலில் சிக்கி சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் நேற்று (17) காலை மீட்கப்பட்டுள்ளது.
உடவலவை ,கொழும்பகே பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் குறித்த வீட்டில் வசித்த 48 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வீட்டிற்கு அருகாமையில் கடையொன்றை நடாத்தும் அவர், இன்று அதிகாலை தனது மனைவியுடன் தகராறு செய்து வீட்டிற்குள் வந்து தீ வைத்து கொண்டதாக மனைவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் எம்பிலிபிட்டிய நீதவான், தள விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் உடவலவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.