ஊவா மாகாண சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊவா வெல்லஸ்ஸ ‘ஜன சஹன’ நடமாடும் சேவையின் இரண்டாவது வேலைத்திட்டம் நேற்று மே மாதம் 14 ஆம் திகதி வெல்லவாய மஹிந்த ராஜபக்ஷ கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அவர்களின் எண்ணக்கருவுக்கு அமைய மாகாண சபையின் அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் அதிகாரிகள் மக்களிடம் சென்று, மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் இந்த நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கண் மற்றும் பல் சிகிச்சை, தொற்றா நோய் தொடர்பான அறிவுறுத்தல்கள், ஆயுர்வேத மருத்துவ கிளினிக் மற்றும் சேவைகள், தொழில் பயிற்சிகளில் இளைஞர் யுவதிகளை ஈடுபடுத்தல், சுற்றுலாத் துறையின் பாட நெறிகளுக்கான ஆட்ச்சேர்ப்பு, புலமை பரிசில் திட்டங்கள், காணி தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வு, பொது போக்குவரத்து சேவை தொடர்பான சிக்கல்களுக்கான தீர்வு, சாரதி பயிற்சிக்கான பதிவுகள், சிறிய மற்றும் நடுத்தர தொழிலாளர்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை வழங்குதல், தொழில் ரீதியான வழிகாட்டல் சேவைகள், கல்வி தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வுகள், மாகாண வீதி அபிவிருத்தி, அங்கவீனமானவர்கள் மற்றும் சமூக சேவை தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வு, கிராம அபிவிருத்தி திட்டங்கள், 60 – 40மூ மின்சாரம் வழங்குதல், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள், வீடுகள் மற்றும் தண்ணீர் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள், நவீன மயப்படுத்தப்பட்ட விவசாயத் திட்டங்கள் தொடர்பான அறிவுறுத்தல்கள், கால்நடை உற்பத்தி திட்டங்கள், நீர்ப்பாசன புணரமைப்பு திட்டங்கள், நன்னீர் மீன்பிடி, அலங்கார மீன் வளர்ப்பு திட்டங்கள், கூட்டுறவு அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் சேவைகள், உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பான சிக்கல்கள், பிராந்திய அபிவிருத்தித் தேவைகளை இங்காணல், தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்குதல், உத்தியோகஸ்தர்களுடைய நிறுவன ரீதியிலான சிக்கல்களைத் தீர்த்துவைத்தல் உள்ளிட்ட பல சேவைகள் பொதுமக்களுக்காக முன்னெடுக்கப்பட்டன.
ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரிவெனாக் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜித பேருகொட உள்ளிட்ட பிரதேச அரசியல் பிரமுகர்கள், மாகாண பிரதான செயலாளர் தமயந்தி பரணகம, ஆளுநரின் செயலாளர் ஆர்.எச்.சி.பிரியந்தி உள்ளிட்ட மாகாண சபையின் அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து தீர்வுகளையும், ஆலோசனைகளையும் வழங்கினார்.
