ஹட்டன் நோட்டன் பிரதான நெடுஞ்சாலையில் வனராஜா பகுதியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார் என அட்டன் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் இன்று 14 ம் திகதி பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
டிக்கோயாவில் இருந்து காசல்ரி பகுதியை நோக்கி சென்ற முச்சகக்ரவண்டியும் வனராஜா பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற முச்சக்கரவண்டியுமே இவ்வாறு நோருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
குறித்த விபத்து கடும் வேககம் காணமாக இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த போக்குவரத்து பொலிஸார் விபத்துக்குள்ளான இரு முச்சக்கர வண்டிகளும் கடும் சேதத்திற்க்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மஸ்கெலியா நிருபர்.
