கம்பளை நகரில் பாலத்தில் பாய்ந்த பெண்: போத்தலாப்பிட்டி பகுதியில் சடலமாக மீட்பு!
கம்பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கம்பளை நகரில், கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட கடுமையான மழை வெள்ளப் பெருக்கின் போது, கம்பளை பாலத்தின் மேல் இருந்து ஆற்றில் பாய்ந்து மாயமான பெண்ணின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 03.08.2026 அன்று மதியம், கம்பளை பிரதேச மக்கள் வெள்ள அபாயத்தால் பதற்றமான சூழ்நிலையில் இருந்த சந்தர்ப்பத்தில், திடீரென பெண் ஒருவர் பாலத்திலிருந்து ஆற்றில் குதித்து மாயமானார்.
இந்நிலையில், தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின்னர், குறித்த பெண்ணின் சடலம் இன்று கம்பளை – போத்தலாப்பிட்டி, கலு பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த கம்பளை பொலிஸாரும், தடயவியல் (SOCO) பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
க. யோகா
