13 வயதுடைய மாணவியை துஸ்ப்பியோகம் செய்த மாமன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (30/06) நோட்டன் பகுதியில் இடம் பெற்றுள்ளது.
கடந்த 30 திகதி நோட்டன் பகுதியில் பாடசாலை செல்லும் மாணவி ஒருவர் துஸ்ப்பியோகத்துக்கு உள்ளாகி உள்ளதாக கிடைக்க பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து நோட்டன் பொலிசார் 42 வயதுடைய அவரது மாமாவை கைது செய்து ஹட்டன் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தினர்.
இதன் போது சந்தேக நபரை 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தது உள்ள நிலையில்,பாதிக்கப்பட்ட மாணவி கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் உள்ள விசேட வைத்திய அதிகாரியின் கீழ் பரிசோதனை மேற்கொள்ள அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என நோட்டன் பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மஸ்கெலியா நிருபர்.