தரமான மற்றும் பாதுகாப்பான சுகாதார சேவையை நாட்டு மக்களுக்கு வழங்கும் நோக்கில் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட 75 மில்லியன் ரூபாய் செலவில் காலி கராபிட்டிய தேசிய வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பக்கவாத நோய்க்கான சிகிச்சை பிரிவு நேற்று முன்தினம் நோயாளர்களுக்கு குணப்படுத்தும் சேவையை வழங்குவதற்காக சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரனவினால் பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
தென் மாகாணத்தின் ஒரே ஒரு மற்றும் முதலாவது பக்கவாத நோய் சிகிச்சை பிரிவான இந்த பிரிவை நிர்மாணிக்கம் வேலை திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் செயல்பாடுகளை காளி மாவட்ட மருத்துவர்கள் சங்கம் மேற்கொண்டிருந்தது.
பக்கவாத நோய் சிகிச்சை பிரிவை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கையடிக்கப்பட்டதன் பின்னர் பிரிவை மேற்பார்வை செய்த சுகாதார அமைச்சரினால் முதலாவது நோயாளி உள்வாங்கப்பட்டதுடன், இப்பிரிவின் நிர்மாணப் பணிகள் 2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இப்பணிகள் இடைநிறுத்தப்பட்டு நிர்வாண செயற்பாடுகள் மீண்டும் கடந்த வருடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
இதற்கு முன்னர் வேறு நோய் பிரிவின் கீழ் இந்த பக்கவாத நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததுடன், பக்கவாத நோயாளிகள் வேறு நோய் நிலைமைகளை விட நோயாளி அங்கவீன நிலையை அடைவதற்கு எதுவாக அமைந்துள்ளது.
தற்போது கொழும்பு, குருணாகல், கண்டி போன்ற அரசாங்க வைத்தியசாலைகளில் பக்கவாத சிகிச்சை பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன் நோய் சிகிச்சை சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
