கொட்டகலை – யதன்சைட் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!
கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட யதன்சைட் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (17)இடம்பெற்றது.
கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினர் சுப்பையா மகேந்திரன் அவர்களின் விசேட வேண்டுகோளுக்கு இணங்க, பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த் அவர்களினால் முன்வைக்கப்பட்ட வேலைத்திட்ட முன்மொழிவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மாகாண சபை நிதியத்திலிருந்து இதற்காக 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த யதன்சைட் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டமானது இன்று உத்தியோகபூர்வமாக அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த், பிரதேச சபையின் உறுப்பினர் சுப்பையா மகேந்திரன் மற்றும் பெருமளவிலான தோட்டப் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.

