உச்சநீதிமன்ற மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் வகையிலான 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவினால் இந்தச் சட்டமூலம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
நீதித்துறையில் நிலவும் தேக்க நிலை மற்றும் வழக்குத் தேக்கங்களைக் குறைக்கும் நோக்கில், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 65 இலிருந்து 67 ஆகவும், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 63 இலிருந்து 65 ஆகவும் இந்தத் திருத்தத்தின் மூலம் உயர்த்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

