பலாங்கொடை சமனலவெவ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.சுற்றுலா ஒன்றை மேற்கொண்டு வருகைதந்த குழுவின் ஒருசிலர் சமனலவெவ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற சந்தர்பத்தில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிழந்தவர் வென்னப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடையகமல் பிரஷங்க என்பவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரை பம்பஹின்ன பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக பலாங்கொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை சமனலவெவ காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
