இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் 08 முக்கிய கருப்பொருள்களை கொண்டு அமைத்துள்ள உபகுழுவில் மலையக தமிழர்களுக்கு நிலவும் மனித உரிமைகள் சார் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்காக மலையக தமிழர் சமூகம் என்ற உப குழுவையும் அமைத்துள்ளது.
இது இலங்கை வரலாற்றில் முதன் முதலாக மலையக மக்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அமைத்துள்ள முதலாவது உப குழு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
குறித்த உப குழுவின் முதலாவது கூட்டத்தொடர் (14/08/2024)இலங்கை மனித உரிமைகள் அணைக்குழுவின் தலமையகத்தில் ஆணையாளர் பேராசிரியர் தை .தனராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
கலந்துரையாடலில் உபகுழுவின் செயலாளர் சட்டத்தரணி கபிலன் வில்லவராஜன்,பணிப்பாளர் நிஹால் சந்திரஸ்ரீ ,இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏனைய ஆணையாளர்களான கலாநிதி கிஹான் குணாதிலக்க , பேராசிரியர் பர்ஹானா ஹனிபா ஆகியரோடும்
, ஆணைக்குழுவின் ஏனைய முக்கிய அதிகாரிகளோடும் ,மலையகசமூகத்தை பிரதிநித்துவப்படுத்தி இவ் உபகுழுவுக்கு தெரிவுசெய்யப்பட்ட சிவஞானம் பிரபாகரன் ,திருமதி பி .யோகேஸ்வரி ,கந்தையா தனபாலசிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இக் கூட்டத்தொடரில் ஆணையாளரும் பேராசிரியருமான தை .தனராஜ் அவர்கள் குறித்த உப குழு அமைக்கப்பட்டமைக்கான நோக்கத்தினை விபரித்ததுடன் ,தொடர்ந்து மலையக மக்களுக்கு நிலவும் நடைமுறை சார் மனித உரிமை பிரச்சனைகள் தொடர்பிலான கருத்து பரிமாறல்களும் இடம்பெற்றதோடு கலந்துரையாடப்பட்ட குறித்த பிரச்சனைகள் ,உரிமைகள் சார் விடயங்களுக்கு எவ்வாறு தர்க்க ரீதியிலான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் ஆணைக்குழு கவனம் செலுத்தியது.
மலையகத்தமிழர் உப குழுவில் இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள்
1.கந்தையா தனபாலசிங்கம்
2. சிவஞானம் பிரபாகரன்
3.திருமதி பி .யோகேஸ்வரி
4.கலாநிதி ஜோ-வில்லியம்
5.சட்டத்தரணி சுகுமாரன் விஜயகுமார்
6.நடேசன் சுரேஷ்
7.ஜீவரத்னம் சுரேஷ்குமார்
தனா

